பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் உணவு டெலிவரி!

லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் விடியோ வைரலாகியுள்ளது.
பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் உணவு டெலிவரி!

ஹைதராபாத்: லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் விடியோ வைரலாகியுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள புதிய தண்டனை சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா) சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தெரிவிக்காமல் தப்பியோடும் கனரக வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இந்த கடுமையான ஷரத்துகளை திரும்பப் பெறக் கோரி ஜம்மு- காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் லாரி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை முதல் இன்று காலை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம், பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர், குதிரையில் சொமேட்டோ பையை மாட்டிக் கொண்டு உணவை விநியோகிக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த உணவு விநியோகிக்கும் ஊழியரின் அர்ப்பணிப்பையும், புதிய முயற்சியையும் இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com