மணிப்பூரின் தற்போதைய நிலையைப் பற்றி கவலை கொள்வதால்தான் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரிலிருந்து துவங்குகிறார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மஹிமா சிங் தெரிவித்துள்ளார்.
'பாஜக அரசுக்கு மணிப்பூரைப் பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு மக்களின் பிரச்னைகளைப் பற்றி கவலை இல்லை' என தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் மஹிமா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'மணிப்பூரின் இன்றைய நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. அதைப்பற்றி கவலை கொள்ளும் மிகச்சில தலைவர்களும் ராகுல் காந்தியும் ஒருவர். அதனால்தான் தனது நடைபயணத்தை அங்கிருந்து துவங்க திட்டமிட்டுள்ளார்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே
மேலும் 'தேர்தலுக்காக மட்டுமே இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காக்கும் முயற்சி இது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தியின மக்களுக்கு இடையே நடந்துவரும் வன்முறைச் சம்பங்களால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

15.3.1976: கூடிய சீக்கிரம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் சப்ளை: ஆந்திர முதல்வர் உறுதி

தோ்தல் நடத்தை விதி: கடலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழா நிறைவு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

