போக்சோ வழக்கு: சிறுமியின் குடும்பத்தாரைத் தாக்கிய மர்ம நபர்
இடுக்கி: வண்டிப்பெரியாறு சிறுமி பாலியல் மற்றும் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இளைஞரின் உறவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரைத் தாக்க முயன்ற சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் தாத்தாவை குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனின் உறவினர் கூரான பொருளால் குத்த முயற்சி செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் காலை 11:30 மணிக்கு நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்க முயன்றவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டார்.
போக்சோ நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான குற்றத்திற்கான சாட்சியம் அல்லது அவர் நிரபாரதி என்பதற்கு எதிரான சாட்சியங்களை நிறுவ புகார் தரப்பு தவறியதால் அவரை விடுவிக்க டிச.14 உத்தரவிட்டது.
இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் மாநில அரசின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: மேற்கு வங்க ரேஷன் ஊழலில் நகராட்சி முன்னாள் தலைவர் கைது!
ஜுன் 30, 2021 அன்று ஆறு வயதான சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் முதலில் வழக்கத்துக்கு மாறான இறப்பாக பதிவு செய்யப்பட்டது. உடற்கூராய்வு, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது.