மின் கம்பத்தில் ஏறிய நபர்: மதுவால் உண்டான விபரீதம்

மது போதையில் மின்சாரம் தாக்கிய நபர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாதிரி படம்
மாதிரி படம்
Published on
Updated on
1 min read

நொய்டா: மது போதையில் மின் கம்பத்தில் ஏறிய கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த நபர், மின்சாரம் தாக்கியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஜெவார் பகுதியில் 35 வயதுள்ள நோஷாத் என்பவர் மின்சாரம் தாக்கியதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படதாக காவலர்கள் தெரிவித்தனர், 

மது போதையில் , மின் கம்பத்தில் ஏற முயன்ற நோஷாத்  டிரான்ஸ்பார்மருக்கு அருகில் உள்ள மின்சார கம்பத்தில் 25 அடி வரை ஏறியுள்ளார். அங்கிருந்த மின்கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

அதற்குள் அருகிலிருந்த மக்கள் மின் கம்பத்துக்கு அருகே கூடிவிட்டனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நிலையாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com