மூதாட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வடக்கு மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகூர் கிராமத்துக்கு அருகே உள்ள சரோவா டவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து காவலர்கள் தெரிவித்தாவது:
“மங்களா பிரவீன் ரதோத், 60 வயதான மூதாட்டி அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள், மருமகள் உடன் வசித்து வந்துள்ளார். அவரது இளைய மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
“மகன், அவரது மனைவியுடன் மனைவியின் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களா பேசி வந்துள்ளார். இது சச்சரவாக 7 முதல் 8 மாதங்களாக நீடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில்அவர் இருந்ததால் அதற்கு சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது காலையில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக அவர் குதித்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பில்கிஸ் பானு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மம்தா
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].