டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியாவில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:22 pm

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 400-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கரனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளதாக மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 6 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் மற்றும் அசாமில் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உள்ளது. பெருந்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,44,81,893  ஆக உள்ளது. இதுவரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,402 ஆக உள்ளது. 

நாட்டில் 819 பேர் புதியவகை ஜெ.என்.1 வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.