இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 400-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கரனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளதாக மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 6 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் மற்றும் அசாமில் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியர்களைச் சகோதரர்களாகக் கருதுகிறோம்: மாலத்தீவு கூட்டமைப்பு
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உள்ளது. பெருந்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,44,81,893 ஆக உள்ளது. இதுவரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,402 ஆக உள்ளது.
நாட்டில் 819 பேர் புதியவகை ஜெ.என்.1 வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.