தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உத்தரகண்ட்டில் குளோரின் வாயு கசிவு!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் குளோரின்  வாயு கசிவு ஏற்பட்டதால் பலர் மூச்சுத் திணரலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்.

Updated On :9 ஜனவரி 2024, 9:37 am

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஜான்ஜ்ரா பகுதியில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததினடிப்படையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குளோரின் கசிவு காரணமாக அந்த பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த காலியான நிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குளோரின் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், என்டிஆர்எஃப் (NDRF), எஸ்டிஆர்எஃப் (SDRF) மற்றும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.