உத்தரகண்ட்டில் குளோரின் வாயு கசிவு!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் குளோரின்  வாயு கசிவு ஏற்பட்டதால் பலர் மூச்சுத் திணரலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஜான்ஜ்ரா பகுதியில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததினடிப்படையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குளோரின் கசிவு காரணமாக அந்த பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த காலியான நிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குளோரின் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், என்டிஆர்எஃப் (NDRF), எஸ்டிஆர்எஃப் (SDRF) மற்றும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com