டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காவலர் உள்பட 4 பேர் பலி!

பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

DIN

பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள லாச்சி சுங்கச்சாவடியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தியபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

இந்த தாக்குதலில் 3 காவலர் உள்பட 4 பேர் பலியாகினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு விரைந்தது.

இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதி முழுவதும் சீல் வைத்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கைபர் பக்துன்க்வாவில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகளின் கொடிய ஊடுருவல்களால் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஜனவரியில், வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் காவலர் வேடமணிந்த தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 101 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலும் காவல்  அதிகாரிகள் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.