6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலை வாங்கி தருவதாக பண மோசடி: 3 பேர் கைது

உள்ளூர் நாளிதழ்களில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. 

News image
Updated On :10 ஜனவரி 2024, 11:52 am

DIN

புவனேஷ்வர்: ஒடிசா அரசின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, இந்தியளவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளது.

ஒடிசா மட்டுமில்லாது ஜம்மு- காஷ்மீர், குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இந்தk கும்பல் பலரை ஏமாற்றியுள்ளது.

மும்பை, தில்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் முதன்மையாக செயல்பட்டு வந்த கும்பல், கடந்து சில மாதங்களாக ஒடிசாவில் வாடகை இடத்தில் அலுவலகத்தைச் செயல்படுத்தி வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நாளிதழ்களில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. 

விளம்பரம் வழியாக மக்களை ஈர்த்து ஒடிசா பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஆள்களை எடுப்பதாக பண மோசடியில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.