இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதையடுத்து இந்த நிகழ்வு நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 15 உடன் 150 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், வருகிற ஜனவரி 15 முதல் இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதையும் படிக்க: பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள்!
இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: 150 ஆண்டுகள் என்ற மைல் கல்லை இந்திய வானிலை ஆய்வு மையம் எட்டவுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வருகிற ஜனவரி 15 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை பல்வேறு விதமாக கொண்டாட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகும் சில கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 1875 ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

