டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காட்டிற்குள் விறகு வெட்டச் சென்றவர்கள் சடலமாக மீட்பு!

மணிப்பூரில் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்ற 4 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

News image
கோப்புப்படம்.
Updated On :11 ஜனவரி 2024, 7:41 am

DIN

மணிப்பூரில் சுரசந்த்பூர் மாவட்டத்தில் விறகு வெட்டுவதற்காக மலைப்பகுதிகளுக்கு சென்ற நான்கு பேரில் மூன்று பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 

கடந்த புதன்கிழமை பிஷ்னுபூர் மாவட்டத்தில் அக்கசோய் பக்தியைச் சேர்ந்த நான்கு பேர் விறகு வெட்டுவதற்காக அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்றனர். அப்போது தொலைந்துபோன அவர்களில் மூன்று பேரின் சடலம் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இபோம்சா சிங், அவரது மகன் ஆனந்த் சிங், ரோமன் சிங் ஆகியோர் ஹைடாக் பாலியேன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தாரா சிங் எனும் மற்றொரு நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூவரும் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.