ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போகி கொண்டாடினார்.
தமிழர்கள் திருநாளான பொங்கல் திருநாள் ஜன.15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நான்கு நாள்கள் கொண்டாடும் திருவிழாவான பொங்கல் தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகும்.
இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் போகி பண்டிகையைக் கொண்டாடினார்.
முன்னதாக, புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பார்வையிட்டு, கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின், ஜே.சி.பி., உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம், கழிவுநீர் கால்வாய்கள் தோண்டி, தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டது.