இண்டிகோ விமானியைத் தாக்கிய பயணி..! என்ன நடந்தது?

தில்லியில் இண்டிகோ விமானத்தின் விமானியைப் பயணி ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இண்டிகோ விமானியைத் தாக்கிய பயணி..! என்ன நடந்தது?

தில்லியில் ஏற்பட கடும் பனி மூட்டம் காரணமாக நேற்று (ஜன.14) 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேர தாமத்துக்குப் பின்பே இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கேரளத்திலிருந்து கிளம்பும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு தில்லியிலிருந்து கோவா செல்லவேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாகக் கிளம்பாமல் இருந்தது. இதனால், குழப்பமடைந்த பயணிகளிடம்  விமானி, வானில் நிலவும் பனி மூட்டத்தால் விமானம் தாமதமாகவே புறப்படும் எனக் கூறினார். 

அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், ‘பொய் சொல்லாத’ என்றபடி வேகமாக விமானியை நெருங்கி அவரை அடிக்கத் துவங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். 

தாக்குதலில் ஈடுப்பட்ட பயணியைச் சிலர் தடுத்து அமைதிப்படுத்தினர். விமானியை அடித்த பயணியின் பெயர் சஹில் கத்தாரியா எனத் தெரிய வந்துள்ளது. 

நடிகை ராதிகா ஆப்தே உள்பட பலர் விமான தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com