டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ராமர் கோயில் திறப்புவிழா: இணைய பாதுகாப்புக்கு நிபுணர்கள் குழு அனுப்பிவைப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவினை முன்னிட்டு இணைய பாதுகாப்புக்கு நிபுணர்கள் குழுவை அமைத்தது உள்துறை அமைச்சகம்.

News image
Updated On :19 ஜனவரி 2024, 2:31 pm IST

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவினை முன்னிட்டு இணைய பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகம் நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜன.22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி இணைய அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்று கிடைத்த தகவல்களையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இணைய பாதுகாப்புக்கான உயர்மட்ட நிபுணர் குழுவை அயோத்தி நகருக்கு அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உளவுத்துறை மற்றும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நிபுணர்கள் குழுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் அயோத்தி கோயிலில் விஐபி நுழைவு மற்றும் சைபர் குற்றவாளிகளால் வாட்ஸப்பில் அனுப்பப்படும் "கைபேசி செயலிகள்" குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட 7,000 பேருக்கு மேல் கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

நிபுணர்கள் குழு அயோத்தியில் இணைய பாதுகாப்பு மையத்தை அமைத்து, இணைய போக்குவரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக சைபர் குற்றவாளிகளின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து தடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.