ராமர் கோயில்: குஜராத்தில் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!
குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ம் அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில், குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ம் அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஊழியர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் அவர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் அரை நாள் விடுமுறை என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...