தற்போது முடிவடைந்த சபரிமலை மகரவிளக்கு பூஜை சீசனில் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2023-2024 ஆம் ஆண்டுக்கான மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மகரவிளக்கு சீசனில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கான வருவாய் ரூ.357.47 கோடியாக பதிவானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான வருவாய் ரூ.10 கோடி அதிகரித்துள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.