விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடியரசு தினம்: நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜனவரி 2024, 8:23 am

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒடிசா டிஜிபி அருண்குமார் சாரங்கி கூறுகையில், 

விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக விஐபி.க்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாசவேலைகள் நடைபெறாமல் இருக்க நக்சல் பாதித்த பகுதிகளில் குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை முழுவதும் ரோந்துக் குழுக்களால் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  தற்போதைய நிலைமை சாதாரணமாக உள்ளது. நெடுஞ்சாலையைக் கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாய் படையும் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.