பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

2025-ல் பிகாரில் பாஜக ஆட்சியமைக்கும்: மத்திய அமைச்சர்  கிரிராஜ் சிங் 

2025-ல் பிகாரில் பாஜக ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர்  கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

News image
கிரிராஜ் சிங் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 10:54 am

DIN

2025-ல் பிகாரில் பாஜக ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர்  கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2025-ல் பிகாரில் பாஜக ஆட்சியமைக்கும். 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2025 பேரவைத் தேர்தலில் பிகார் மக்கள் பாஜகவுக்காக வாக்களிப்பார்கள். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் கவனித்து வருகிறேன். பிகாரில் நாங்கள்தான் பிரதான கட்சி, அதனால் நடக்கும் செயல்பாடுகளை பாஜக தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

ஆனால் என்ன நடந்தாலும் அதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை. அண்மையில் பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டத்தில் நிதீஷ் குமாரை விட ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் முன்னுரிமை அளித்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் தொடங்கியது. பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பியே நிதீஷ்குமார் பாஜகவில் இருந்து விலகியதாகவும், ஆனால் அவருக்கு லாலு யாதவின் ஆதரவு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

பிகார் மாநிலத்தில் மஹாகத்பந்தன் கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு, ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பிரியப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறும் ஐக்கிய ஜனதா தளம் விரைவில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு பொறுப்பேற்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.