வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 28 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தல் நம் அனைவருக்கும் விஷப்பரீட்சை. 2019-ல் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை 28 மக்களவையிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலால் அரசு சீர்குலைந்துள்ளது.
மாநிலத்தில் ஊழல் மலிந்து விட்டது, எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை. இருப்பினும் அவர்கள் சதி செய்து மக்களவைத் தேர்தலில் வாக்கு பெற திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்க முடியாது, மாநில மக்களுக்காக போராட ஒன்றிணைவோம். மக்களை நம்ப வைப்பது நமக்கு முன்னால் ஒரு சவால் உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்தது கட்சிக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! நிதின் நவீன் தொகுதியைக் கைப்பற்றினார்!

வைகையை மாசுபடுத்தாமல் காப்போம்: மதுரை மக்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

நான் சிம்புவின் அம்மாவா? வதந்திகளுக்கு பதில் கொடுத்த ஆண்ட்ரியா!

சூர்யா - 47 திரைப்படத்தின் பெயர் இதுவா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



