மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்: நிதீஷ் குமார் ராஜிநாமா குறித்து கார்கே!

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது குறித்து இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

News image

மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

Updated On :28 ஜனவரி 2024, 6:56 am

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது குறித்து இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பிகார் ஆளுநரை சந்தித்த நிதீஷ் குமாா் முதல்வர் பதவியை  ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். முன்னாகவே எங்களுக்கும், அவருக்கும் இடையே கருத்து மோதல் உள்ளது. லாலு மற்றும் தேஜஸ்விடம் பேசிய போது, இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறப் போவதாக தெரிவித்தனர். அவர் கூட்டணியில் இருக்க விரும்பி இருந்தால், அவர் இருந்திருப்பார், ஆனால் அவர் வெளியேறா விரும்புகிறார்.

இது நமக்கு முன்பே தெரிந்ததுதான். இந்தத் தகவலை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் முன்பே எங்களுக்குத் தெரிவித்தனர். இன்று அது உண்மையாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்

நிதிஷ்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.