அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டா் அளவுகோலில் 4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.