சண்டீகர் மேயர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாஜக வெற்றி பெற்றது.
சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியின் கீழ் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டது. பாஜகவை சேர்ந்த மனோஜ் சோங்கரும், ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும் மேயர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதையும் படிக்க | பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 60 பயணிகளின் நிலை?
மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில் இந்தியா கூட்டணியின் 8 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனால், பாஜக 16 வாக்குகள், இந்தியா கூட்டணி 12 வாக்குகள் பெற்று, பாஜகவின் மனோஜ் சோங்கர் மேயராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொலி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணி ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி - விஜய் | TVK Vijay

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி!
டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி: கே.என். நேரு நம்பிக்கை

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடும் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

