ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேற்கு வங்கத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது

மேற்கு வங்கத்தில் நடு வீதியில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூலை 2024, 9:25 am

DIN

மேற்கு வங்கத்தில் நடு வீதியில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம், உத்தர் தினாஜ்பூரில் உள்ள சோப்ராவில் பெண் உட்பட இருவரை பொதுமக்கள் முன்னிலையில் ஆண் ஒருவர் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் அங்கு கூடியிருந்த மக்கள் யாரும் இந்த சம்பவத்தை தடுக்க முன்வரவில்லை. தாக்குதல் நடத்தியவர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாலே அவர்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்னர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அபராதமும் விதித்திருக்கின்றனர். கடந்த வாரம் இந்த நிகழ்வு விடியோ இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக இஸ்லாம்பூர் போலீஸார் தாமாக முன்வந்து ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து தஜேமுல் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையமும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.