மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சட்டவிரோத கால் சென்டர் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..


மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக கால் சென்டர் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், அமலாக்கத்துறையின் புலனாய்வுப் பிரிவினர் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகளை நடத்தினர்.
கால் சென்டர் நெட்வொர்க் தொடர்பான சந்தேகத்திற்குரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை விசாரிக்கும் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் சிலிகுரி, ஹவுரா, பிதான்நகர் மற்றும் துர்காபூர் உள்ளிட்ட பல நகரங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதலே இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் பல தனிநபர்களின் வளாகங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோதனைக்கு உள்படுத்தப்படுவர்களில் சுரஸ்ரீ கர், சாம்ராட் கோஷ் மற்றும் சுபாஜித் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கவும், நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறியவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருள்கள் ஆய்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...