மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அவையில் ராகுல் போல் நடந்துகொள்ளக் கூடாது: கிரண் ரிஜிஜு!

ராகுல் போல் நடந்துகொள்ள வேண்டாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுக்கு கிரண் ரிஜிஜுஅறிவுறுத்தல்...

News image
கிரண் ரிஜிஜு
Updated On :2 ஜூலை 2024, 7:45 am

DIN

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு தேசிய ஜனநாாயகக் கூட்டணி எம்பிக்களுக்கு பாடம் என்றும் இதுபோன்ற நடத்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்,

ராகுல் காந்தி நேற்று அவையில் நடந்துகொண்டது, அவைத்தலைவரை விதிகளை மீறி அவமரியாதை செய்தது கட்சி எம்பிக்களும், என்டிஏ எம்பிக்களும் செய்யக்கூடாத ஒன்றாகும். இது நம் அனைவருக்கும் பாடம்.

பிரதமரின் உரை குறித்த விவரங்களை வழங்கிய அவர், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மோடி வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு எம்பியும் நாட்டின் சேவைக்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர். அனைத்து எம்பிக்களும் ஜனநாயகத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி முன்மாதிரியான நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக மாற வேண்டும். அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களும் நாட்டை உயர்த்திடப் பாடுபட வேண்டும்.

நாடாளுமன்ற விதிகளின்படி, மாநிலங்களின் விவகாரங்களை மக்களவையில் திறம்பட முன்வைக்கவும், தேசிய விவகாரங்களில் விவாதங்களில் ஈடுபடவும் பிரதமர் மோடி எம்பிக்களை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

அருங்காட்சியகத்தில் ஜவஹர்லால் நேரு முதல் பிரதமர் மோடி வரை, அனைத்து பிரதமர்களின் பயணமும் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியலும் இல்லை. ஒவ்வொரு பிரதமரும், பதவியில் இருக்கும் போது, ​​தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக பல முன்னாள் பிரதமர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பிறகு பிரதமர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது, இது நாட்டின் அனைத்து முன்னாள் பிரதமர்களின் பணி மற்றும் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.