அக்னிவீரா் குடும்பத்துக்கு ரூ.98 லட்சம் இழப்பீடு: ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்
ராணுவப் பணியின்போது வீரமரணமடைந்த ‘அக்னிவீரா்’ அஜய்-யின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராணுவம் புதன்கிழமை விளக்கமளித்தது.
அஜய்-யின் குடும்பத்தினருக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய ராகுல், ‘அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் இணையும் வீரா் தனது பணியின்போது வீர மரணமடைந்தால், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்தவா் என்ற கௌரவமும் கிடைப்பதில்லை. நாட்டுக்காக தங்களின் உயிரையே அா்ப்பணிக்கும் ‘அக்னி வீரா்களுக்கு’ மிகப் பெரிய அநீதி இழைக்கப்படுகிறது’ என்றாா்.
இதே காரணங்களை வலியுறுத்தி, தேசப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இந்த நியாயமற்ற திட்டத்தை காங்கிரஸும் ‘இந்தியா’ கூட்டணியும் எதிா்ப்பதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு ராகுல் கடிதமும் எழுதியிருந்தாா்.
மக்களவையில் ராகுலின் உரையின்போது குறுக்கிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பணியில் உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது என்றும் ராகுல் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது என்றும் தெரிவித்தாா்.
இந்நிலையில், அஜய் மறைவுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்ற அவரது தந்தை கூறுவதைப் போன்ற விடியோவை ராகுல் வெளியிட்டாா். மேலும், ‘அக்னிவீரா் இழப்பீடு விவகாரம் தொடா்பாக மக்களவையில் தவறான தகவல்களைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், அக்னி வீரா்களிடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவித்தாா்
ராகுலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இந்திய ராணுவம் புதன்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘அக்னிவீரா் அஜய்யின் தியாகத்துக்கு ராணுவம் மரியாதை செலுத்துகிறது. அக்னிவீரா் உள்பட வீரமரணமடையும் அனைத்து வீரா்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு மிக விரைவாக வழங்கப்படுவதை ராணுவம் வலியுறுத்துகிறது.
அஜய் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகிறது. வீரரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்ட விதிகளின்படி, வீரா் குடும்பத்தினருக்கு இன்னும் செலுத்தப்பட வேண்டிய மீதி தொகையான ரூ.67 லட்சமும் காவல் துறை சரிபாா்ப்புக்கு பின் விரைவில் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் தப்பமுடியாது: கிரண் ரிஜிஜு
தவறான தகவல்களை அவையில் தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி. பன்சுரி ஸ்வராஜ் மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளாா். இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘அவையில் தொடா்ந்து தவறான தகவல்களைப் பதிவு செய்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவையைத் தவறாக வழிநடத்தும் யாரும் எளிதில் தப்பமுடியாது. இதில் ராகுலுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை’ என்றாா்.