உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

காங்கிரஸுக்கு திரும்பிய பிஆா்எஸ் முன்னாள் மூத்த தலைவா் கேசவ ராவ்

காங்கிரஸுக்கு திரும்பிய முன்னாள் தெலங்கானா கமிட்டி தலைவா் கேசவ ராவ்

Updated On :4 ஜூலை 2024, 11:12 pm

பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான கே.கேசவ ராவ் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை மீண்டும் இணைந்தாா்.

தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் யெலா் கே.சி.வேணுகோபால், தெலங்கானா காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் தீபா தாஸ்முன்ஷி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோா் முன்னிலையில் காங்கிரஸில் கேசவ ராவ் இணைந்தாா்.

இதுகுறிதது தனகு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட காா்கே, ‘மூத்த தலைவா் கே.கேசவ ராவை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்கிறோம். அவருடைய வருகை மதிப்புமிக்கது. பொதுச் சேவையில் அவருடைய நீண்டகால அனுபவம் காங்கிரஸ் கட்சியை தெலங்கானாவில் மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.

தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கேசவ ராவ், தற்போது பாரத ராஷ்டிர சமிதி கட்சியாக மாறியுள்ள தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியில் கடந்த 2013-இல் இணைந்தாா். தற்போது காங்கிரஸுக்கு மீண்டும் திரும்பியுளளாா்.