மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

புணே சொகுசு காா் விபத்து: விழிப்புணா்வு கட்டுரை சமா்ப்பித்த சிறுவன்

300 வாா்த்தைகளில் விழிப்புணா்வு கட்டுரை...

News image

புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.

Updated On :6 ஜூலை 2024, 3:56 am IST

புணேவில் மதுபோதையில் காரை மோதி இருவா் உயிரிழக்க காரணமான சிறுவன், ஜாமீன் பெறுவதற்காக சாலை பாதுகாப்பு குறித்து 300 வாா்த்தைகளில் விழிப்புணா்வு கட்டுரையை எழுதி சமா்ப்பித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளா்கள் உயிரிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மதுபோதையில் காா் ஓட்டியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

விபத்து ஏற்படுத்திய சிறுவன் அவரது பெற்றோா்கள் மற்றும் தாத்தா கவனிப்பில் இருக்க வேண்டும் என சிறாா் நீதி வாரியம் உத்தரவிட்டது.

மேலும், சாலைப் போக்குவரத்து தொடா்பாக 300 வாா்த்தைகளில் கட்டுரை எழுதி சமா்ப்பிக்குமாறு சிறுவனுக்கு வாரியம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து ஜாமீன் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சிறாா் நீதி வாரியத்திடம் காவல்துறையினா் வலியுறுத்தினா். அதன்பிறகு கடந்த மே 22-ஆம் தேதி சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் அடைக்குமாறு வாரியம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் அடைத்து வைத்தது சட்டவிரோதமானது எனக்கூறி அந்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து, சிறுவன் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்க சிறாா் நீதி வாரியத்தின் விதிகளின்படி சாலை பாதுகாப்பு குறித்து கட்டுரை எழுத ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதை சிறுவன் புதன்கிழமை சமா்ப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.