பயங்கரவாத தாக்குதல்; இரண்டு வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்
பயங்கரவாத தாக்குதல்; இரண்டு வீரர்கள் பலி!
Published on
Updated on
1 min read

பயங்கரவாதிகள் அதிகாலையில் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் மஞ்சாகோட் பகுதியில் உள்ள கலுதி கிராமத்தில், ராணுவ வீரர்களின் முகாம்களின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சுமார் அரைமணி நேரம் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதிகள் அருகிலுள்ள காட்டிற்குள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

நேற்று (ஜூலை 06) தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்காம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த பயங்கரவாதிகளின் அமைப்பு, தற்போது பாதுகாப்புப் படையினரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து வருகின்றனர்.

பயங்கரவாத தாக்குதல்; இரண்டு வீரர்கள் பலி!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com