திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அம்பானி வீட்டுக் கல்யாணம்! 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம்!

அம்பானி இல்லத் திருமண விழாவுக்காக மும்பையில் போக்குவரத்து மாற்றம்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2024, 12:23 pm

அம்பானி இல்லத் திருமண விழாவுக்காக மும்பையில் 4 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ உலக மாநாட்டு மையம் அமைந்துள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தில் திருமண விழா நடைபெறவுள்ளதால், ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஜூலை 5ஆம் தேதிக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் தம்பதிக்கு ஜூலை 12ஆம் தேதி மும்பையிலுள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதில், பல முக்கிய அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளதால், அந்த மையம் அமைந்துள்ள கிழக்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பொது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்களும், விஐபிக்களும் பங்கேற்கவுள்ளதால், மக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஜியோ உலக மாநாட்டு மையத்தை சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, போக்குவரத்து மாற்ற வழித்தடங்களைக் குறிப்பிட்டுள்ளது.

இதில் அம்பானி இல்லத் திருமண விழாவை பொது நிகழ்ச்சி எனக் குறிப்பிட்டு மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது பொது நிகழ்ச்சி அல்ல? தனிப்பட்ட நிகழ்ச்சி? அதற்காக பொதுமக்களின் அன்றாட வழித்தடத்தை மாற்றுவதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக போக்குவரத்து மாற்றங்களை செய்வது மிகவும் அவமானகரமான செயல். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அம்பானியின் அடிமைகளிடமிருந்து இதனை எதிர்பார்த்ததாகவும் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.