புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மணிப்பூர் மக்களின் வலியை மோடி புரிந்துகொள்ள வேண்டும்: ராகுல்

மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

News image
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி
Updated On :8 ஜூலை 2024, 2:37 pm

DIN

மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

மணிப்பூரில் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை தாமதமின்றி பெற மக்களவையில் குரல் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து தலைநகர் இம்பாலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது, வன்முறையும் வெறுப்பும் எதற்கும் தீர்வாகாது. அன்பும் சகோதரத்துவமுமே தீர்வாக இருக்கும்.

மணிப்பூரில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு வருகை தந்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என நாடு விரும்புகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வர வேண்டியது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இங்கு வந்து மக்களின் குரலைக் கேட்டு அவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒருங்கிணைந்த நிலங்களின் தொகுப்பான இந்தியாவில் மணிப்பூர் பெருமை மிகுந்த மாநிலம். மணிப்பூரில் பிரச்னை ஏற்படவில்லையென்றாலும் பிரதமர் இங்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்து ஓரிரு நாள்கள் தங்கி மக்களின் குரலைக் கேட்க வேண்டும். இது மணிப்பூர் மக்களை சற்று ஆசுவாசப்படுத்தும்.

மணிப்பூர் சூழலை மேம்படுத்த, மீண்டும் அமைதியை நிலைநாட்ட எந்த உதவியையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆளுநரை சந்தித்துப் பேசினோம். மணிப்பூருக்குத் தேவையான உதவிகளை செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளதை அவரிடம் குறிப்பிட்டோம்.

இங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எதுவும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதையும் அவரிடம் கூறினோம். மேலும் பேசி, இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அது எங்களுடைய நோக்கமும் கிடையாது எனக் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ராகுல் காந்தி, நான் கூறியதற்கு மதிப்பு கொடுங்கள். மணிப்பூர் பிரச்னையை திசைதிருப்பும் எந்தவொரு கேள்விகளுக்கு நான் தற்போது பதிலளிக்கத் தயாராக இல்லை. இங்கு நான் வந்தது மணிப்பூர் பிரச்னையை தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே. இதனை திசைதிருப்ப வேண்டாம். மணிப்பூர் இந்தியாவில் உள்ள அழகான மாநிலங்களில் ஒன்று எனக் கூறி எழுந்து சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.