ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஐபோன் கேட்ட இளைஞர் தற்கொலை!

ஐபோன் கிடைக்காத மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை

News image
Updated On :10 ஜூலை 2024, 11:57 am

DIN

ஐபோன் கேட்டு வாங்கித் தராததால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையில் காமோத்தே பகுதியில் வசித்து வந்த 18 வயதான சஞ்சய் வர்மா, தனது தந்தையிடம் ஐபோன் கேட்டு, வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், சஞ்சய் கேட்ட ஐபோனின் விலை ரூ. 1.5 லட்சம் என்பதால், சஞ்சய்யின் தந்தை விலைகுறைவான வேறொரு மொபைலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலான சஞ்சய் வர்மா, கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சஞ்சய் வர்மாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.