ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸை பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

News image

சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ்

Updated On :10 ஜூலை 2024, 2:40 pm IST

பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 200 கோடி பணமோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களை மிரட்டி பெரிய அளவில் பணம் பறித்த விவகாரத்தில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜாக்குலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மோசடி செய்து பெற்ற பணத்தில் ஜாக்குலினுக்கு சந்திரசேகர் விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள் வாங்கிப் பரிசளித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2022- ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சந்திரசேகரின் குற்றச்செயல்கள் குறித்த பிண்ணனி தெரிந்த பின்னரும் ஜாக்குலின் அவர் வழங்கிய விலையுயர்ந்த பரிசுப் பொருள்களை பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் இதுவரை 5 முறை அமலாக்கத்துறையால் விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் தான் நிரபராதி எனவும், சந்திரசேகரின் குற்றப்பிண்ணனி குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.