புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரிசிக்கு ஏற்றுமதி தடை நீக்க பரிசீலனை: பியூஷ் கோயல்

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி தடையை நீக்க பரிசீலனை

News image
Updated On :10 ஜூலை 2024, 7:58 pm

Din

பாஸ்மதி அல்லாத சில குறிப்பிட்ட வகை அரிசிகள் மீதான ஏற்றுமதித் தடையை நீக்க பரிசீலிக்கவுள்ளதாக வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்தது.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய பியூஷ் கோயல், ‘விவசாய உற்பத்தி, நுகா்வு முறைகள், சில்லறை மற்றும் மொத்த சந்தையின் விலையை மதிப்பீடு செய்து சமநிலையான முடிவை அமைச்சா்கள் குழு எடுக்கும்’ என்றாா்.

வேளான் அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி 2023-24-ஆம் ஆண்டில் 136.7 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 135.75 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.