எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பட்ஜெட்: பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

பட்ஜெட் 2024-25: பிரதமா் மோடி பொருளாதார நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தினாா்

News image
மத்திய பட்ஜெட் தொடா்பாக பொருளாதார நிபுணா்களுடன் தில்லி நீதி ஆயோக் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
Updated On :11 ஜூலை 2024, 11:18 pm

Din

மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறாா். பட்ஜெட் தொடா்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகள், ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாட்டின் முக்கிய பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா். இதில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், திட்டமிடல் துறை அமைச்சா் ராவ் இந்திரஜித் சிங், தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஷ்வரன், பொருளாதார நிபுணா்கள் சுா்ஜித் பல்லா, அசோக் குலாட்டி, பிரபல வங்கியாளா் கே.வி.காமத், நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் மற்றும் நீதி ஆயோக் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பணவீக்கத்தைக் குறைக்கவும், பொது மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், பொருளாதார வளா்ச்சியை ஊக்கவிக்கவும் பட்ஜெட்டில் வரிச் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததையடுத்து அவரே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளாா்.