மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஸ்ஸாமில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி: ஒருவர் மாயம்

படகு கவிழ்ந்தபோது 20 பேர் படகில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :12 ஜூலை 2024, 6:21 am

அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார்.

கோல்பரா மாவட்டத்தில் உள்ள சிம்லிடோலா நாராயண்பரா பகுதியில் கிராம மக்கள் பயணித்த நாட்டுப் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் நடந்தபோது கிராம மக்கள் உடலைத் தகனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோல்பரா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் நபனீத் மஹந்தா கூறியதாவது,

கோல்பராவில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் நான்கு உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவித்தார்.

படகு கவிழும்போது படகில் 20 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை, நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.