மாநிலத்தில் நடக்கும் பில்லி, சூனியம் தொடர்பான வழக்குகள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக 4 வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு மகாராஷ்டிரா அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கத் தவறினால் கட்டாயப்படுத்தி சமர்ப்பிக்கவைக்கும் வழிமுறைகளைக் கையாளவிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ராதாகந்தா திரிபாதி தாக்கல் செய்த மனுவை அடிப்படையாகக் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் கொங்கன் பகுதியில் பெண்களைக் கருத்தரிக்க வைப்பதற்காக நடைமுறையில் இருக்கும் சூனியச் சடங்குகள் பற்றி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள திரிபாதி ஒரு சம்பவத்தில் கருத்தரிப்பதற்காக ஒரு பெண்ணுக்கு இறந்த மனிதர்களின் எலும்புகளைப் பொடி செய்து அதனை சாப்பிடுமாறு மாமியாரும் கணவரும் வற்புறுத்தியதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றொரு நிகழ்வில், நன்கு படித்த பெண் ஒருவரைக் கருவுறச் செய்ய மனித எலும்பினைப் பொடி செய்து வீட்டார் சாப்பிடச் சொன்னதாக சிங்காத் பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ஆனால், மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகள் பில்லி சூனியம் தொடர்பான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மற்றொரு நிகழ்வில், ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் சடங்காகப் பொதுவெளியில் நிர்வாணமாகக் குளிக்குமாறு கட்டாயப்படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். உள்ளூர் சூனியக்காரர் ஒருவர் பரிந்துரையின் பேரில் இதனை செய்யச் சொல்வதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் மனிதபலி மற்றும் மனிதாபிமானமற்ற சடங்குகளை ஒழித்தல், தீயசக்தி, அகோரி மற்றும் பில்லி சூனிய சடங்குகள் தடுப்புச் சட்டத்தினை செயல்படுத்துவதில் மாநில அரசு தவறியதால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக திரிபாதி கூறியுள்ளார்.
மாநில இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, மாநிலத்தில் நடைபெறும் இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறைகளை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகளை உறுதி செய்து, தவறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுதாரர் வலியுறுத்தினார்.
பல செய்தி நிறுவனங்களின் செய்திக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ள திரிபாதி, பில்லி சூனியம் குறித்த தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தவறானத் தகவல்களைப் பரப்பும் நிறுவனங்கள் மீது பத்திரிகை கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

தேசிய மக்கள் நீதிமன்றம்: 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,292 வழக்குகளில் ரூ.10.50 கோடிக்குத் தீா்வு

ராணிப்பேட்டை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.82 கோடி இழப்பீடு
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly




