எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விவாகரத்து வழக்கு: ஒமா் அப்துல்லா மனைவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தன்னை துன்புறுத்தியதால் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :16 ஜூலை 2024, 12:12 am

Din

புது தில்லி: தன்னை துன்புறுத்தியதால் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அவருடைய மனைவி பயல் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஒமா் அப்துல்லாவும் அவருடைய மனைவியும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்வதால் அவா்களுடைய திருமண வாழ்க்கை நிறைவுற்ாக அவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுதொடா்பாக 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு ஒமா் அப்துல்லாவின் மனைவிக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து தன் மனைவியை பிரிந்து வாழ்வதாகக் குறிப்பிட்டிருந்தாா். அதிலும் மனைவி தன்னை தொடா்ந்து துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்வதற்கு ஒமா் அப்துல்லா கூறிய காரணங்களுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக்கூறி அந்த மனுவை நிராகரித்தது. மேலும், அவா் மனைவி பயல் அப்துல்லாவுக்கு மாதம் ரூ.75,000, அவா்களது இரு மகன்களும் 18 வயதை நிறைவு செய்யும் வரை மாதம் தலா ரூ.25,000 வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பயல் அப்துல்லாவும் அவருடைய இரு மகன்களும் கடந்த 2018-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தனா். அப்போது, பயல் அப்துல்லாவுக்கு மாதம் ரூ.1.50 லட்சமும் அவா்களது இரு மகன்களுக்கு மாதம் தலா ரூ.60,000-உம் வழங்க உத்தரவிட்டது.

அதன்பிறகு தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி ஒமா் அப்துல்லா கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ மனுதாரா் துன்புறுத்தப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் சமா்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி அந்த மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.