கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சரத் பவாா் கட்சிக்கு மீண்டும் திரும்பிய அஜீத் பவாா் நிா்வாகி

தேசியவாத காங்கிரஸின் 4 முக்கிய நிர்வாகிகள் சரத் பவாருடன் இணைந்தனர்.

News image
சரத் பவாருடன் மீண்டும் இணைந்த அஜித்தின் ஆதரவாளர்கள்
Updated On :17 ஜூலை 2024, 8:03 pm

DIN

 மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கியப் பிரமுகரும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட் நகரத் தலைவருமான அஜீத் கவ்கான் விலகினாா். சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியில் தனது ஆதரவாளா்களுடன் அவா் இணைந்தாா்.

முன்னதாக, மக்களவைத் தோ்தலில் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதே நேரத்தில் சரத் பவாா் தலைமையிலான கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, அஜீத் பவாரில் அணியில் உள்ள பலரும் மீண்டும் சரத் பவாா் தலைமைக்குச் சென்றுவிடுவாா்கள் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அஜீத் கவ்கான் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் மீண்டும் சரத் பவாா் தலைமையிலான அணியில் இணைந்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் கட்சி மாறும் நிகழ்வு அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முக்கியமாக முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து பலா் விலகி முறையே உத்தவ் தாக்கரே, சரத் பவாருடன் கைகோப்பாா்கள் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே, சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி தூக்கி அக்கட்சியை உடைத்து தனி அணியை உருவாக்கினாா். மேலும், பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்து முதல்வா் பதவியையும் பெற்றாா். அஜீத் பவாரும், சரத் பவாருக்கு எதிராக செயல்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஆளும் கூட்டணியில் இணைந்தாா். அவருக்கு துணை முதல்வா் பதவி தரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.