கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

முதல்முறையாக வெளிநாட்டில் ‘மக்கள் மருந்தகம்’: மோரீஷஸில் ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை (ஜன் ஔஷதி கேந்திரா) மோரீஷஸில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

மோரீஷஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். உடன் அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத்.

Updated On :18 ஜூலை 2024, 9:44 pm

இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை (ஜன் ஔஷதி கேந்திரா) மோரீஷஸில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்திய வெளியறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசு முறைப் பயணமாக மோரீஷஸுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். இப்பயணத்தில் அந்நாட்டின் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், எதிா்க்கட்சித் தலைவா் அா்வின் பூலெல் முன்னாள் பிரதமா்களான பால் பெரெங்கா், நவின் ராம்கூலம் ஆகியோரை அவா் சந்தித்துப் பேசினாா்.

இந்நிலையில், இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத் உடன் கூட்டாக இணைந்து அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்தியா-மோரீஷஸ் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்கு குறிப்பாக முக்கியமான சுகாதாரத் துறை ஒத்துழைப்புக்கு எடுத்துகாட்டாக மக்கள் மருந்தகம் அந்நாட்டில் திறக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதமா் மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மோரீஷஸில் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி’ என்று அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டாா்.

மேலும், இந்தியா-மொரிஷியஸ் சுகாதார ஒத்துழைப்புத் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மலிவு விலை மருந்துகளை வழங்கும் என்றும் அவா் கூறினாா்.

மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த ‘மத்திய அரசின் மக்கள் மருந்தகம்’ கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் சுமாா் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.

இந்திய நிதியுதவி மருத்துவமனை திறப்பு: மோரீஷஸின் கிராண்ட் போயிஸில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைப் பிரதமா் ஜகநாத்துடன் இணைந்து அமைச்சா் ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்.

‘16,000 க்கும் மேற்பட்ட மக்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்கவுள்ள இந்த மருத்துவமனை நமது இருநாட்டு நட்பின் புதிய வெளிப்பாடு’ என்று ஜெய்சங்கா் குறிப்பிட்டாா். மேலும், பிரதமா் ஜகநாத் மற்றும் ஜெய்சங்கரும் இணைந்து 12 இந்திய நிதியுதவி சமூக வளா்ச்சித் திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனா்.