அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாகும் என மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய அவா், ‘அஸ்ஸாமில் முஸ்லிம் மக்கள் தொகை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரிகளின் படி மாநிலத்தில் தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகிவிட்டது. ஆனால், ஹிந்து சமூகத்தின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 16 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
பெருகிவரும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகையைக் குறைக்க அரசாங்கம் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்குள்ளது. முஸ்லிம் சமூகம் ராகுல் காந்தியின் பேச்சை மட்டும் கேட்பதால், அவரை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் அது அடங்கிவிடும்’ என்றாா்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வா் ராஜிநாமா: புதிய அரசு மே 11-இல் பதவியேற்பு
அஸ்ஸாம் முதல்வா் கருத்து: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்!

அஸ்ஸாம் முதல்வா் மனைவியை விமா்சித்த வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் முன் ஜாமீன்

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

