அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் மாநிலமாகும்: முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா

ராகுல் காந்தியை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் முஸ்லிம் மக்கள் தொகை கட்டுப்படும்.

News image

ஹிமந்த விஸ்வ சா்மா (கோப்புப்படம்)

Updated On :20 ஜூலை 2024, 3:15 am IST

அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாகும் என மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய அவா், ‘அஸ்ஸாமில் முஸ்லிம் மக்கள் தொகை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரிகளின் படி மாநிலத்தில் தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகிவிட்டது. ஆனால், ஹிந்து சமூகத்தின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 16 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

பெருகிவரும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகையைக் குறைக்க அரசாங்கம் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்குள்ளது. முஸ்லிம் சமூகம் ராகுல் காந்தியின் பேச்சை மட்டும் கேட்பதால், அவரை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் அது அடங்கிவிடும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.