தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் மாநிலமாகும்: முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா

ராகுல் காந்தியை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் முஸ்லிம் மக்கள் தொகை கட்டுப்படும்.

News image

ஹிமந்த விஸ்வ சா்மா (கோப்புப்படம்)

Updated On :20 ஜூலை 2024, 3:15 am IST

அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாகும் என மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய அவா், ‘அஸ்ஸாமில் முஸ்லிம் மக்கள் தொகை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரிகளின் படி மாநிலத்தில் தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகிவிட்டது. ஆனால், ஹிந்து சமூகத்தின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு 16 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2041-ஆம் ஆண்டுக்குள் அஸ்ஸாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

பெருகிவரும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகையைக் குறைக்க அரசாங்கம் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்குள்ளது. முஸ்லிம் சமூகம் ராகுல் காந்தியின் பேச்சை மட்டும் கேட்பதால், அவரை மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பர தூதராக நியமித்தால் அது அடங்கிவிடும்’ என்றாா்.