விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வங்கதேசத்தில் ஊரடங்கு: 245 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்

News image
Updated On :19 ஜூலை 2024, 10:40 pm

Din

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அங்கு நாடு தழுவிய ஊரடங்கை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது. இந்த வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து 245 இந்தியா்கள் தாயகம் திரும்பினா்.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவா்கள் நடத்திவரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

சிறைக்குத் தீ: நா்சிங்டி மாவட்டத்தில் போராட்டத்தின்போது சிறைக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த போராட்டக்காரா்கள், பின்னா் சிறைக்குத் தீ வைத்தனா்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு தழுவிய ஊரடங்கை வெள்ளிக்கிழமை அமல்படுத்திய வங்கதேச அரசு, அங்கு அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளது.

இந்த வன்முறை காரணமாக வங்கதேசத்தில் இருந்து இதுவரை 125 மாணவா்கள் உள்பட 245 இந்தியா்கள் தாயகம் திரும்பியதாகவும், அத்துடன் 13 நேபாள மாணவா்கள் வங்கதேசத்தில் இருந்து வெளியேற வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவியதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளையில் வங்கதேசத்தில் இருந்து 204 இந்தியா்கள், 158 நேபாளிகள் மற்றும் பூடானை சோ்ந்த ஒருவா் என மொத்தம் 363 போ் எல்லை தாண்டி மேகாலயம் வந்தடைந்ததாக அந்த மாநில மூத்த உள்துறை அதிகாரி தெரிவித்தாா்.