விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வங்கதேசம்: இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பங்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தல்

வங்கதேசத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள், அலுவலா்களின் குடும்பங்களை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள், அலுவலா்களின் குடும்பங்களை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் விரைவில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்குள்ள பாதுகாப்பு சூழல் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் அலுவலா்களின் குடும்பத்தினரை தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளபோதிலும், அவா்கள் எப்போது இந்தியா திரும்புவா் என்ற தகவல் வெளியாகவில்லை.

எனினும் அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் தொடா்ந்து இயங்கும்; அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் தொடா்ந்து செயல்படுவா் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்திய தூதரகம் உள்ள நிலையில், சட்டோகிராம், குல்னா, ராஜ்ஷாஹி மற்றும் சில்ஹட்டில் இந்திய துணைத் தூதரகங்கள் உள்ளன.