ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதுகெலும்பு தசைச்சிதைவு குறித்து அவையில் பேச அனுமதி கோரும் ஆம் ஆத்மி எம்பி!

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மலிவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும்

News image
எம்பி சஞ்சய் சிங்
Updated On :24 ஜூலை 2024, 5:42 am

DIN

நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பாதித்துள்ள முதுகெலும்பு தசைச்திசைவு குறித்து மக்களவையில் தனது கருத்தை முன்வைக்க அனுமதிக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் முதுகெலும்பு தசைச்சிதைவு எனப்படும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த நோய் மிகவும் ஆபத்தானது, இதனால் உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் இறக்கின்றனர்.

இந்த தசைச்சிதைவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஊசியின் விலை ரூ.17 கோடியாகும். இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு ஜிஎஸ்டியும் அரசு விதித்துள்ளது. நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இதற்கு சிகிச்சை செய்ய இயலாமலும், மருந்துகள் கிடைக்காமலும் உயிரிழக்கின்றனர்.

இதுதொடர்பாக அவர் அவைக்கு அனுப்பிய கடிதத்தில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பது, சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் வரி விகிதங்களில் உடனடியாக குறைக்க வேண்டும். இதனை அரசு உறுதி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்பது ஒரு நரம்பியல் நோயாகும், இது தன்னார்வ தசை இயக்கத்தைப் பாதிக்கிறது, இது தசைகள் சுருங்குவதற்கு வழிவகுக்கிறது.

முன்னதாக 2022ஆம் ஆண்டில், நாட்டில் 295 முதுகெலும்பு தசைச் சிதைவு வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்தார்.

இந்த சிகிச்சைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்கவரி மற்றும் ஐஜிஎஸ்டி ஆகியவற்றை முழுவதுமாக தள்ளுபடி செய்வதால், தசைச்சிதைவு நோய்க்கான மருந்துகள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் என்றும் பவார் கூறினார் என்று அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.