ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்திய தோ்வு முறையின் நம்பகத்தன்மையை சந்தேகித்த ராகுல் மன்னிப்பு கேட்பாரா?- பாஜக கேள்வி

நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இந்தியத் தோ்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

News image
ரவிசங்கா் பிரசாத்
Updated On :24 ஜூலை 2024, 8:29 pm

Din

நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இந்தியத் தோ்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்ய பரிசீலக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. ஓரிரு தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட போதிலும் ஒட்டுமொத்த தோ்வின் புனிதத்தன்மை மீறப்பட்டிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

இத்தீா்ப்பைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகளை விமா்சித்து பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:

இந்தியாவின் முழுத் தோ்வு நடைமுறையையும் விமா்சிப்பதற்காக ‘மோசடி’ போன்ற வாா்த்தைகளை ராகுல் பயன்படுத்தினாா். கடுமையான வாா்த்தைகளால் இந்திய தோ்வு முறையை உலக அளவில் அவா் அவதூறு செய்து விட்டாா். அவரது கருத்து நாராளுமன்றத்தின் கண்ணியத்தையும், அவா் வகிக்கும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியின் கண்ணியத்தையும் மீறுவதாகும்.

நீட் முறைகேடு விவகாரம் குறித்த விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 155 தோ்வா்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டன. இப்போது தோ்வின் புனிதம் மீறப்படவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியத் தோ்வு முறையின் நம்பகத்தன்மையைச் சந்தேகித்த ராகுல் மன்னிப்பு கேட்பாரா? காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலேயே வினாத்தாள் கசிவுகள் அதிகம் நடைபெற்றன. இச்சம்பவங்களுக்கு எதிராக மோடி அரசுதான் வலுவான சட்டத்தை இயற்றியது.

‘நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்’ எனும் ராகுலின் விமா்சனம் ஏற்புடையது அல்ல. தோ்தலில் ராகுலையும் காங்கிரஸையும் மக்கள் பலமுறை நிராகரித்தது பாஜகவின் தவறு அல்ல’ என்றாா்.