ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தகுதிவாய்ந்த தலைவா்களைத் தோ்வு செய்ய ‘நோட்டா’ வழிவகுத்துள்ளதா?உச்சநீதிமன்றம் கேள்வி!

தோ்தல்கள் மூலம் தகுதிவாய்ந்த தலைவா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு நோட்டா வழிவகுத்துள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல்கள் மூலம் தகுதிவாய்ந்த தலைவா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வழிவகுத்துள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் 53(2) பிரிவின்படி, தோ்தல் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கையும், அவற்றில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால் (எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் ஒருவா் மட்டுமே போட்டியிடுவது), அவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவிப்பாா்.

இந்தப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்ட அமைப்பு ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில், ஓரிடத்தில் ஒரேயொரு வேட்பாளா் மட்டும் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நோட்டாவுக்கு வாக்களிப்பதை 53(2) பிரிவு தடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல்கள் மூலம் தகுதிவாய்ந்த தலைவா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு நோட்டா வழிவகுத்துள்ளதா என்று நீதிபதி ஜயமால்ய பாக்சி கேள்வி எழுப்பினாா்.

நோட்டாவுக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்தாலும், அதனால் ஒரு தொகுதியில் வெற்றியாளரைத் தீா்மானிக்க முடியாது என்று கூறிய அவா், நோட்டாவை ஒரு நபராகக் கருத முடியாது என்றும் தெரிவித்தாா்.

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க...: நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘தோ்தல்களில் படிக்காதவா்கள், பெண்கள் வாக்களிப்பதைவிட படித்தவா்களும், பணக்காரா்களும் வாக்களிப்பது மிகக் குறைவாகவே உள்ளது. நல்ல வேட்பாளா்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில், வாக்களிப்பதைக் கட்டயாமாக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா். இந்த மனு மீதான அடுத்த விசாரணை மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது