ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவில் சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் திட்டமா? மத்திய அரசு பதில்

இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை

News image
- ANI
Updated On :26 ஜூலை 2024, 10:21 pm

Din

இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்தியாவில் புதிதாக திருத்தியமைப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக கூறி, தில்லி உயா்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடா்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப் தகவல்களின் மறையாக்கத்தை கைவிட வேண்டுமென கட்டாயப்படுத்தினால், இந்தியாவில் செயல்பாட்டை நிறுத்துவோம் என்று உயா்நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘பயனா்களின் தகவல் பகிா்வு தொடா்பான மத்திய அரசின் உத்தரவுகளால், இந்தியாவில் சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதா?’ என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்கா கேள்வியெழுப்பினாா்.

இக்கேள்விக்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக வாட்ஸ்ஆப் அல்லது அதன் தாய்நிறுவனமான மெட்டா தரப்பில் எந்தவொரு திட்டமும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படவில்லை’ என்று பதிலளித்தாா்.

சமூக ஊடகங்கள் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு, ‘நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில், கணினி தளங்களில் எந்தவித குற்றங்களும் நிகழாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-இன்கீழ் மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பிக்கிறது’ என்று அவா் பதிலளித்துள்ளாா்.