வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுதந்திர தினத்தில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: பாதுகாப்பு அமைச்சகம்

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக்கன்றுகளை நடவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது தாயின் நினைவாக ஒரு மரக்கன்று நட்டாா்.
Updated On :28 ஜூலை 2024, 8:59 pm

Din

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக்கன்றுகளை நடவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பை பிரதமா் மோடி கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்த முன்னெடுப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது தாயின் நினைவாக சமீபத்தில் ஒரு மரக்கன்று நட்டாா். மேலும், இயற்கையைப் பாதுகாக்கும் இந்த முன்னெடுப்பை ஆற்றல்மிக்கதாக மாற்ற மக்கள் அனைவரும் பங்களிக்குமாறு வலியுறுத்தினாா்.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சுதந்திர தினத்தையொட்டி ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இது நாட்டின் முப்படைகள் மற்றும் பாதுகாப்பு தொடா்புடைய அமைப்புகளான சைனிக் பள்ளிகள், என்சிசி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), ஆயுத தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.