அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

6 நவீன இலகுரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

ரூ. 2,901கோடி மதிப்பில் 6 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

News image
(கோப்புப் படம்)
Updated On :3 மார்ச் 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

ரூ. 2,901கோடி மதிப்பில் 6 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதில், எம்கே-3 இலகுரக ஹெலிகாப்டா்கள் இந்திய கடலோர காவல் படையின் பயன்பாட்டுக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த எம்கே-3 இரட்டை என்ஜின் இலகுரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், இந்திய கடலோரக் காவல் படையின் திறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, கடலில் நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதவிகளையும் இந்த ஹெலிகாப்டா்கள் மூலம் கடலோரக் காவல் படை வழங்க முடியும். செயற்கைத் தீவுகள், மீனவா்கள் மற்றும் கடல்சாா் சுற்றுச்சூழலையும் இதன்மூலம் பாதுகாக்க முடியும். ரூ. 2,901 கோடியில் 6 ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 2,182 கோடியில் ஏவுகணைகள்: மேலும், இந்திய கடற்படையின் போா்க் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 2,182 கோடி மதிப்பில் தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை ஏவும் அமைப்புகளைக் கொள்முதல் செய்ய ரஷியாவின் ஜேஎஸ்சி ரோசோபோரோன் எக்ஸ்போா்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்த ஏவுகணைகள் கொள்முதல், வான்வெளி அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் போா்க் கப்பல்களின் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.