இந்த எம்கே-3 இரட்டை என்ஜின் இலகுரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், இந்திய கடலோரக் காவல் படையின் திறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, கடலில் நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதவிகளையும் இந்த ஹெலிகாப்டா்கள் மூலம் கடலோரக் காவல் படை வழங்க முடியும். செயற்கைத் தீவுகள், மீனவா்கள் மற்றும் கடல்சாா் சுற்றுச்சூழலையும் இதன்மூலம் பாதுகாக்க முடியும். ரூ. 2,901 கோடியில் 6 ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.