மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊழலை எதிர்த்து பாஜகவினர் ஆக. 3 முதல் நடைபயணம்

மாநில அரசின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் ஆக. 3 முதல் ஒரு வாரம் நடைபயணம்

News image
- படம் | கர்நாடக பாஜக எக்ஸ் தளப் பதிவு
Updated On :28 ஜூலை 2024, 5:03 pm

DIN

மாநில அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, கர்நாடகத்தில் பாஜக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளனர். ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் 7 நாள் நடைபயணம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடையும்.

இவ்விரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று(ஜூலை 28) பெங்களூரில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக அம்மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் நிலவும் ஊழல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, கர்நாடகத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ. 187 கோடி தொகை காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நடைபயணத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பாவும், ஹெச். டி. குமாரசாமியும் பங்கேற்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைபயணத்துக்கு மாநில அரசு அனுமதி மறுத்தாலும் அதை மீறி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள அவர், கடைசி நாளன்று நடைபயணத்தில் பாஜக தேசியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.